ராஜகுமாரியின் சுயம்வரம்-52

ராஜகுமாரியின் சுயம்வரம்-52


மருத்துவர் குமாரோடு வருகை தந்தவர்கள் வேறு யாருமில்லை. ராஜகுமாரியைச் சுமந்து சென்றிடும் பல்லக்கைத் தூக்கிச் செல்லும் அந்த நான்கு பேரும் தான். அவர்களைப் பார்த்த மீனா கதவினைத் திறந்தாள்.

ராஜகுமாரியை அழைத்து வந்து ஏற்றி விடுங்கள் என்றான் மருத்துவர் குமரன். "ஆகட்டும் மருத்துவரே" என்ற மீனா,பானுவின் உதவியோடு ராஜகுமாரியைக் கொண்டு வந்து பல்லக்கில் ஏற்றி விட்டார்கள். விட்டது மட்டும் இன்றி அவர்கள் இருவரும் கூடவே சென்றார்கள் .

அவர்களோடு மருத்துவரும் பின் தொடர்ந்தார். சற்றுத் தூரம் சென்றதும் ஓர் அறையில் நுழைந்தார்கள். அங்கே ஏற்பாடு செய்யப் பட்டு இருந்த மூலிகை எண்ணெய் தயார் நிலையில் இருக்க பானுவை நோக்கிக் கூறினார் மருத்துவர்."இருவரும் ராஜகுமாரியைத் கீழே நீட்டி உறங்குவது போல் கிடத்தி விடுங்கள்" என்று  அவர்களும் அதைச்செய்தார்கள்  

உடனே ராஜகுமாரியின் நெற்றிக்கு நேராகவே எண்ணெய் முட்டியைக் கட்டித் தொங்க விட்டார்." இருவரும் கவனமாய்க் கேளுங்கள் ராஜகுமாரி எழுந்து இருக்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும் சரியா இரவு முழுவதும் இந்த எண்ணெய்  அவர் நெற்றியில் வடிந்து கொண்டே இருக்கும் கவனித்துக் கொள்ளுங்கள்.நான் எனது அறைக்குச் செல்கிறேன்.காலையில் வருவேன் உங்களுக்குத் துணையாக இரு காவலர்களை அழைக்குகக் கொள்ளுங்கள்" என்று மருத்துவர் கூறி விட்டு எண்ணெய் வடியும் படி அனைத்தையும் சரி வர வைத்து விட்டு புறப்பட்டான் .

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post