Ticker

6/recent/ticker-posts

கோட்டாபயவால் புறக்கணிக்கப்பட்ட விஜயதாச, கம்மன்பிலவுடன் இணைகிறார்…


கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், நீதியமைச்சர் பதவியைப் பெறுவார் என்ற பெரிய எதிர்பார்ப்பில் இருந்த விஜயதாச ராஜபக்சவுக்கு அந்தப் பதவி வழங்கப்படாமல், அப்போது புதிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அலி சப்ரிக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தற்போது உதய பிரபாத் கம்மன்பிலவுடன் இணைந்து எதிர்மறை அரசியலை முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி சட்டத்தரணியும் கலாநிதியுமான விஜயதாச ராஜபக்ச, தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது எந்தக் கத்தோலிக்க மதகுருமார்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஊடகச் சந்திப்பொன்றில் பேசிய உதய கம்மன்பில, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

உதய கம்மன்பிலவும் விஜயதாச ராஜபக்சவும் இணைந்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக புதிய கட்டத்தில் வேறுபட்ட மற்றும் சர்ச்சைக்குரிய விளக்கங்களை சமூகத்தில் பரப்ப முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

உதய கம்மன்பில, “உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான பயனாளி வேறு யாருமல்ல, கர்தினால் அவர்களே” என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொடூரத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மதகுருமார்களையும், அந்த மதத்தைச் சேர்ந்த விசுவாசிகளையும் இலக்காகக் கொண்டு புதிய பிரசாரமொன்றை இவர்கள் முன்னெடுத்து வருவதாக, அவர்களது கருத்துக்களிலிருந்து தெளிவாகப் புரிகிறது.

lankatruth


 


Post a Comment

0 Comments