
பொரளை மெகசின் சிறைச்சாலையின் மதிலுக்கு மேலால் சிறைச்சாலைக்குள் சந்தேகத்திற்கிடமான பொதியொன்றை வீச முயன்ற இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை, சீவலி ஒழுங்கை பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பொதியிலிருந்து போதைப்பொருள், 10 லைட்டர்கள், 02 தொலைபேசிகள், 02 தொலைபேசி சார்ஜர்கள் மற்றும் 10 ஜோடி தோடுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தடுத்து வைப்பு உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments