
பேரோ பாரி அதை வைத்து பாடலும் அப்போதே பாடி வச்சான்
காந்தாரி பாரேன்டி நானும் வாரேன்டி
பாரி மேல ஏறி சவாரி வாரேன்டி
சேரியோரம் உனைத் தேடி வாரேன்டி.
பாட்டைக் கேட்ட மந்திரி சிரித்து விட்டு கேட்டார் உன் மனைவி பெயர் காந்தாரியா என்று இல்லை இல்லை அவள் பெயர் சிந்தாமணி ஆனால் அவளுக்கு நான் வைத்த பெயர் காந்தாரி அவள் சரியான பாஜாரி ஐயா என்றான் மந்திரியைப் பார்த்து ஓகோ என்று தலை அசைத்த மந்திரி கையில் கொஞ்சம் பணம் கொடுத்து வழி அனுப்பி விட்டார் .
(என பாட்டி முடித்ததும் அப்பாடா என்றாங்க மேரி அக்கா என்னடி என்று பாட்டி கேட்டதும் மேரியக்கா சொன்னாங்க இல்ல பெரியம்மா அந்த கோபாலுக்கு என்னாகுமோ என்று பதட்டமாய் இருந்துச்சு .இப்படி ஒரு முட்டாள் நம் ஊரில் இருந்தால் எப்படி இருக்கும் என்றாள் பாட்டியோட சின்ன மருமகள் அதற்கு பேரன் உதயன் சொன்னான் சித்தி நம்மட நாட்டில் அரசன் இல்லையே அரசனும் இல்லை கோமாளியும் இல்லை இருந்தா ஜாலியாக இருக்கு இல்ல சித்தி என்றான். கவனித்துக் கொண்டு இருந்த பாட்டியின் இளைய மகன் சொன்னான் அங்கு ஒரு முட்டாள் தான் இருந்தான் இங்கு வரிசை கட்டி நிக்குறது தெரியலையோ என்று நாசுக்காக கேலி செய்தான்.
(தொடரும் )
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments