அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி
மற்றவர் வன்பசி ஆற்றுவது சேர்த்துவைத்த செல்வத்தை வைக்கும் இடம்.
குறன் 227:
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது.
வாழ்வில் பகிர்ந்துண்போர் தம்மைப் பசிநோயோ நீண்ட நெருங்காதுணர்.
குறள் 228:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்.
ஈயாமல் பொருளை இழப்போர், அறியாரோ ஈவதன் இன்பத்தை இங்கு?
குறள் 229:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல்.
பிறருக்கே ஈயாமல் சேர்த்துக் குவித்தல், இரத்தலை விஞ்சும் இழிவு.
குறள் 230:
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈத லியையாக் கடை
சாதலின் துன்பத்தை விஞ்சும் இயலாமை வேதனைத் துன்பம் உணர்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments